விற்பனையில் புதிய சாதனை படைத்த டாட்டா பஞ்ச் : 20 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்று அசத்தல்
May 13 2023 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மாடலான டாட்டா பஞ்ச் கார்,
விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த மாடல் காரை டாட்டா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது. குறைந்த விலையில் எஸ்யூவி காராக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காருக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட 20 மாதங்களில் 2 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் தெரியவித்துள்ளது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை வரலாற்று இது புதிய சாதனை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காருக்கு கிடைத்துள்ள வரவேற்பால், இதில் விரைவில் CNG வேரியண்ட் அறிமுகப்படுத்தப்படும் என்றும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.