இந்தியாவின் முதல் தானியங்கி எலெக்ட்ரிக் கார் அறிமுகம் : AI தொழில்நுட்பத்தைக் கொண்டு ZPot கார் உருவாக்கம்
Jun 5 2023 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக நாடுகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், பெங்களூரு நிறுவனம் ஒன்று, ஓட்டுநரை இல்லாமல் இயங்கும் காரை உருவாக்கி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த மைனஸ் ஜீரோ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், தனது முதல் தானியங்கி வாகனமான இசட்பாட் என்ற எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தை ஓட்ட தனியாக டிரைவர் தேவைப்படாது என்றும், முழுக்க முழுக்க தானாகவே ஓடும் திறன் கொண்ட 'செல்ஃப் டிரைவிங்' வாகனம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கூடுதல் சிறப்பாக, AI தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.