முதலமைச்சர் ஜெயலலிதாவை, நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேணுகோபால் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
Sep 9 2014 11:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவை, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் P. வேணுகோபால் மற்றும் தலைமைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், டாக்டர். பி.வேணுகோபால், எம்.பி., நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி நிலைக் குழுத் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், 1981-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், முனைவர் ரா.கண்ணன், திரு.கே.கணேசன், திரு. அசோக்குமார் குப்தா, திரு.ராஜீவ் நயன் செளபே ஆகியோர் தலைமைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்றதையொட்டி சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.