தூத்துக்குடி: தெற்கத்தி வீரன் படத்தை திரையரங்கிற்கு பார்க்க வந்த சாரத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Dec 2 2022 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியை சேர்ந்த நடிகரும், இயக்குனருமான சாரத் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள தெற்கத்தி வீரன் என்ற திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியானது. தூத்துக்குடி மாநகரில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட இந்த திரைப்படத்தை காண வந்த நடிகரும், இயக்குனருமான சாரத் திரையரங்கிற்கு வந்தார். அப்போது ரசிகர்கள் பட்டாசு வெடித்து சால்வை மற்றும் மாலை அணிவித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.