லியோ படத்திற்காக சென்னையில் செட் அமைக்கும் பணி தீவிரம் : 4 நாட்களில் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பும் படக்குழு
Mar 20 2023 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
'லியோ' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் செட் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணியில் இரண்டாவது முறையாக 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் லியோ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வரும் நிலையில், இன்னும் 4 நாட்களில் படப்பிடிப்பை முடித்து வரும் 24-ம் தேதி படக்குழு சென்னை திரும்புவதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க, அதற்காக செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.