கர்நாடக இசை பிரபலம் பாம்பே ஜெயஸ்ரீக்கு திடீர் உடல்நலக்குறைவு : மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பிரிட்டன் மருத்துவமனையில் அனுமதி
Mar 25 2023 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்குபவரும், சங்கீத கலாநிதி விருது பெற்றவருமான பாம்பே ஜெயஸ்ரீ மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரிட்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த பாம்பே ஜெயஸ்ரீ, கடந்த சில தினங்களாக கழுத்து வலிப்பதாக தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது படுக்கயறையில் சுயநினைவின்றி கிடந்த பாம்பே ஜெயஸ்ரீயை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்து பார்த்தபோது அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாம்பே ஜெயஸ்ரீக்கு கீ ஹோல் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் ஆஸ்தான பாடகரான பாம்பே ஜெயஸ்ரீ தமிழில் பார்த்த முதல் நாளே, சுட்டும் விழி சுடரே உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.