நாடு முழுவதும் 200 புதிய வழித்தடங்களில் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு - தமிழகத்தில் 8 வழித்தடங்களை உருவாக்க நடவடிக்கை
Aug 2 2018 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் புதிதாக 8 வழித்தடங்கள் உட்பட நாடு முழுவதும் 200 புதிய ரயில்வே தடங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, ரயில்வே துறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரயில்வேதுறை அமைச்சர் Rajen Gohain, நாடு முழுவதும் 200 புதிய வழித்தடங்களை அமைக்கவுள்ளதாக தெரிவித்தார். புதிய வழித்தடங்களை அமைப்பது மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து
மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் புதிதாக 8 வழித்தடங்களும், குஜராத்தில் 4, ஆந்திரப்பிரதேசத்தில் 18 என மொத்தம் நாடு முழுவதும் 200 புதிய வழித்தடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து ரயில்வே தடங்கள் அமைப்பதற்காக பாதைகள் தேர்வு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இந்த பதிலை எழுத்துப்பூர்வமாகவும் சமர்ப்பித்தார்.