வங்கிக் கடனை திரும்ப செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா : லண்டன் வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கைகள் தீவிரம்
Oct 12 2018 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கிக் கடனை திரும்ப செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையாவின் லண்டன் வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
பொதுத்துறை வங்கிகளில் விஜய் மல்லையா பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்பச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். பிரிட்டன் தலைநகர் லண்டனில், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்துள்ள மல்லையாவை, நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அவருக்கு சொந்தமான நிறுவனம் பெற்ற கடனை திரும்பச் செலுத்தாததால், மல்லையாவுக்கு சொந்தமான லண்டன் வீட்டை பறிமுதல் செய்து, கடன் தொகையை ஈடு செய்யும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இதையடுத்து, லண்டன் வீட்டை மீட்க தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெறும் முயற்சியில் மல்லையா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சட்டவிரோதமாக வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட வழக்கில், மல்லையாவுக்கு சொந்தமான பெங்களூரில் உள்ள சொத்துகளை முடக்க, பெங்களூரு மாஜிஸ்திரேட் தீபக் ஷெராவத், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.