குடியரசு தினத்தன்று பிரதமரின் மன் கீ பாத் உரை : அரசு ஊடகங்களில் நேரலைக்கு ஏற்பாடு
Jan 23 2020 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரசு தினத்தையொட்டி வரும் 26-ஆம் தேதி, பிரதமர் திரு. நரேந்திர மோதி பங்கேற்கும் மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மன் கீ பாத் என்ற நிகழ்ச்சியின் மூலமாக நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் பிரதமர் திரு. மோதி உரை வானொலியில் உரை நிகழ்த்தி வருகிறார். அதன்படி, இந்த ஆண்டின் முதலாவது மன் கீ பாத் நிகழ்ச்சி, குடியரசு தினமான வரும் 26-ஆம் தேதி அன்று ஒலிபரப்பாகிறது. முதல்முறையாக இந்த நிகழ்ச்சி மாலையில் நடைபெறுகிறது. ஆல் இந்தியா ரேடியோ உள்ளிட்ட அரசு ஊடகங்களில் இது நேரலையாக ஒலிபரப்பு செய்யப்படும். கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி ஒலிபரப்பான மன் கீ பாத் உரையில், விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் குறித்தும், சுய சார்புடன் இயங்கிய மகளிர் குழுக்கள் பற்றியும் பிரதமர் உரை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.