மத்திய அரசுக்கு சொந்தமாக வாட்ஸ் அப் செயலி உருவாக்கும் பணிகள் தீவிரம் - மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக கண்காணிப்பின் கீழ் பரிசோதனை முயற்சி
Jan 23 2020 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாட்ஸ் அப் செயலியை சொந்தமாக உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பேஸ்புக் மூலமாக வெளியிடப்படும் வாட்ஸ் ஆப் செயலியில், பல்வேறு வதந்திகளும் உண்மைக்கு மாறான தகவல்களும் பரவி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க இந்தியா தனது சொந்தமான வாட்ஸ் ஆப் செயலியை உருவாக்கி வருகிறது. GIMS எனப்படும் இந்த அரசு துரித தகவல் சேவை செயலி தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள் மற்றும் துறைகளுக்கு இது பயன்படுத்தப்பட உள்ளது. ஆங்கிலம் இந்தி தவிர இதர 11 இந்திய மொழிகளிலும் இந்த ஆப் விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது.