காவிரி ஆற்றின் குறுக்‍கே மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் - கர்நாடக அரசின் கோரிக்‍கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Jan 23 2020 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசின் கோரிக்‍கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் கர்நாடக அரசு விண்ணப்பித்தது. அதை பரிசீலித்த மத்திய அரசு, தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி சுமூக தீர்வுக்கு வருமாறு அறிவுறுத்தியது.

இதனிடையே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவை இல்லை என்பதால், மத்திய அரசு, அனுமதி வழங்க வேண்டும் என்று, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது. கர்நாடகாவின் நடவடிக்‍கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்‍கல் செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கர்நாடகா பதில் மனு தாக்‍கல் செய்தது. கர்நாடகாவின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. வழக்‍கு விசாரணை 2 வாரங்களுக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00