டெல்லியில் கமல்நாத்திற்கு அனுமதி கிடையாது - "பிரச்சாரத்திற்கு வந்தால் 'காலரை' பிடித்து இழுத்துச் செல்வோம்"- சிரோன்மணி அகாலி தளம்
Jan 23 2020 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் பங்கேற்றால், அவரை சட்டையைப் பிடித்து இழுத்துச் செல்வோம் என்று, சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் டெல்லி தலைவர் திரு. மன்ஜிந்தர் சிங் சிர்சா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்த மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ள பேச்சாளர்கள் பட்டியலில், மத்திய பிரதேச முதலமைச்சர் திரு. கமல்நாத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இது குறித்து பேட்டியளித்த, சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் டெல்லி தலைவர் திரு. மன்ஜிந்தர் சிங் சிர்சா, டெல்லியின் எந்த மூலைமுடுக்கிலும் பிரச்சாரம் செய்ய கமல்நாத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும், ஒருவேளை அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், அவரது சட்டையைப் பிடித்து இழுத்துச் செல்வோம் என்றும் ஆவேசமாகத்தெரிவித்தார். சீக்கிய கொலையாளிகளை காங்கிரஸ் கட்சி ஊக்குவிக்குகிறது என்றும் குற்றம் சாட்டினார்.