ஆண்கள் வீட்டிலிருக்க பெண்கள் வீதிக்குவந்து போராடுகிறார்கள் : உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் பேச்சால் சர்ச்சை
Jan 23 2020 4:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆண்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்க, பெண்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக, உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யாநாத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக, உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அம்மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யாநாத் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது வெட்கக்கேடான விஷயம் என்றும், ஆண்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்க, பெண்கள் வீதிக்கு வந்து, எதற்காக போராடுகிறோம் என்று தெரியாமலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சுதந்திரம் என முழக்கமிட்டால் தேசத் துரோக வழக்கு பாயும் என்றும், பொது சொத்துகளை அழிக்க முற்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். பெண்களின் போராட்டம் குறித்த திரு. யோகி ஆதித்யாநாத்தின் விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.