புதுச்சேரி அரசுக்கு எதிரான கிரண்பேடியின் அராஜகத்தை கண்டுகொள்ளாத பிரதமர் : முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
Jan 23 2020 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி அரசுக்கு எதிராக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை பிரதமர் திரு.நரேந்திர மோடி வேடிக்கை பார்ப்பதாகவும் முதலமைச்சர் திரு.நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நேதாஜி பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்ட விவகாரத்தில் நாடே பற்றி எரிவதாகவும், இப்பிரச்னையில் திரு.அமித்ஷாவின் கருத்துகள் கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.