நித்யானந்தாவுக்‍கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் - கரீபியன் தீவில் தலைமறைவாக உள்ளதாக தகவல்

Jan 23 2020 8:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாமியார் நித்யானந்தாவுக்‍கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்‍கப்பட்டுள்ள நிலையில், அவர், கரீபியன் தீவில் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

சர்ச்சை சாமியார் நித்யானந்தா மீது, குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற புகார்களின் அடிப்படையில் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல வழக்‍குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற அவர், அவ்வப்போது வீடியோக்‍களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இதனிடையே, வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியா அழைத்துவர, கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்ட சூழலில், சாமியார் நித்யானந்தாவுக்கு எதிராக அஹமதாபாத் உயர்நீதிமன்றத்தில் குஜராத் போலீஸ் சார்பாக குற்றப்பத்திரிகை தாக்‍கல் செய்யப்பட்டது. மேலும், நித்யானந்தா எங்கு இருக்கிறார் என கண்டறிந்து கைது செய்ய, குஜராத் போலீசாரின் கோரிக்கையை ஏற்று, சர்வதேச காவல்துறை ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், சாமியார் நித்யானந்தா கரீபியன் தீவில் உள்ள குட்டி நாடான பெலிசில் பதுங்கி இருப்பதாகவும், அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்டை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00