காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகள் : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
Jan 23 2020 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளை, அதிக எண்ணிக்கை கொண்ட நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும், அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும், ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறும், காங்கிரஸ் மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாடு ஆகியவற்றின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை ஒன்றிணைத்து விசாரிக்க, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்தது. இந்நிலையில், இவ்வழக்குகளை, மேலும் அதிக எண்ணிக்கை கொண்ட நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான விசாரணை இன்று நிறைவுபெற்று, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.