நாட்டுக்காக உயிர்நீத்த விலங்குகளுக்கும் போர் நினைவிடத்தை மீரட் நகரில் அமைக்க திட்டம்
Jan 23 2020 8:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராணுவ பணிகளில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிர்நீத்த விலங்குகளுக்கு, உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் போர் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.
ராணுவ பணிகளில் ஈடுபடுத்துவதற்காக நாய்கள், குதிரைகள், கோவேறு கழுதைகளை வளர்த்து, பயிற்சி அளிக்கும் மீரட் ராணுவ மையத்தில், போரில் உயிர்நீத்த விலங்குகளுக்கான போர் நினைவிடத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 2016-ம் ஆண்டில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்கும் பணியின்போது கொல்லப்பட்ட மான்சி என்ற லாப்ரடார் ரக நாயை சிறப்பிக்கும் வகையில் இந்த போர் நினைவிடம் அமைய உள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அனுமதி விரைவில் கிடைத்தவுடன் போர் நினைவிடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.