தெலுங்கு நடிகை ராஷ்மிகாவின் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல்
Jan 23 2020 7:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமாக விளங்கும் நடிகை ராஷ்மிகாவின் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் மொழிகளை கடந்து பலகோடி ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகை ராஷ்மிகா. இவர் தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள ராஷ்மிகாவின் தந்தை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து மொத்தம் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.