இந்தியா-பிரசில் இடையே உயர்நிலைக்குழு பேச்சுவார்த்தை - முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
Jan 25 2020 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா-பிரசில் இடையே கலாச்சாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பிரசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர், நாளை நடைபெறவுள்ள இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்நிலையில், இந்தியா - பிரசில் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாக, இருநாட்டு தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், அதிபர் போல்சொனாரோ, பிரதமர் திரு.நரேந்திரமோதி, வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.அஜித் தோவல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோதி - அதிபர் போல்சொனாரோ முன்னிலையில், இந்தியா-பிரசில் இடையே இணையதள பாதுகாப்பு, உயிரி எரிசக்தி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.