குடியரசு தின விழாவையொட்டி, தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் - போலீசார் தீவிர கண்காணிப்பு
Jan 26 2020 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரசு தின விழாவையொட்டி, தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
71-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி, டெல்லியில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 22 ஆயிரம் போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதே போல், காஷ்மீரில், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கிய வீதிகளில் முள் வேலிகள் அமைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்திலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் உடைமைகள் தீவிர சோதனையிடப்படுகின்றன. அசாம் மாநிலத்திலும் மோப்பநாய்கள் உதவியுடன் போலீசார் ரயில் தண்டவாளங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்கள், விமான நிலையங்களைச் சுற்றி அதிகளவில் போலீசார் பாதுகாப்புப் பணியில் போடப்பட்டுள்ளனர். இதே போல், பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, பாட்னா உள்ளிட்ட நகரங்களில், பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.