மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது - தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
Jan 26 2020 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லிக்கு "பத்ம விபூஷண் விருது" அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகரான எஸ். ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.
அரசியல், சமூகம், கலை, கலாச்சாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொதுச் சேவை, சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து, அவர்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 141 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் மத்திய அமைச்சர்களான அருண் ஜேட்லி, சுஸ்மா சுவராஜ், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த கோவா முதலமைச்சர் மனோகர் பரீக்கர், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகன் நாதன் உட்பட 16 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜெகதீஷ் லால் அவுஜா உட்பட 118 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.