அசாமில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதி - 4 இடங்களில் குண்டு வெடித்ததால் பதற்றம் - உல்ஃபா தீவிரவாதிகள் காரணமா? என விசாரணை
Jan 26 2020 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அசாமில் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் முயற்சியாக திப்ரூகர் உள்ளிட்ட 4 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அசாமில் குடியரசு தின விழாவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், திப்ரூகர், துலியாஜன் உள்ளிட்ட 4 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அசாம் மாநில காவல்துறை டி.ஜி.பி. திரு.மஹந்தா தெரிவித்தார். இத்தாக்குதலுக்கு உல்ஃபா தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் திரு. Sonowal, இது கோழைத்தனமான செயல் என குறிப்பிட்டார். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தாக்குதல் சம்பவத்திற்கிடையே அசாமில் 33 மாவட்டங்களில் குடியரசு தின விழா எந்த பிரச்னையும் இன்றி நடைபெற்றதால், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.