சீனாவின் வூஹானில் தவிக்கும் இந்தியர்களை மீட்க தனி விமானம் : பிரதமர் மோடிக்கு, கேரள முதல்வர் வேண்டுகோள்
Jan 28 2020 1:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் வூஹான் மாகாணத்தில் கரோனா வைரஸின் பாதிப்புகளால் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், அங்கு சிக்கித் தவித்து வரும் இந்தியா்களை தனி விமானம் மூலம் அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேரள முதல்வா் பினராயி விஜயன், பிரதமா் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், வூஹான் அல்லது அருகிலுள்ள விமான நிலையத்திற்கு ஒரு சிறப்பு விமானத்தை அனுப்பி, அங்கு தவித்து வரும் இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பரிசீலிக்குமாறு ஏற்கெனவே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் திரு.எஸ்.ஜெய்சங்கருக்கு இரண்டு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும், வூஹானில் இருந்து வெளியேறும் இந்தியா்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க, கேரள அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடா்பாக, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் விரைந்து செயல்படுவதற்குத் தேவையான அறிவுரைகளையும் வழங்க வேண்டும் என அந்த கடிதத்தில் அவா் தெரிவித்துள்ளார்.