ஆந்திர மாநில சட்ட மேலவையை கலைக்கும் முடிவு - சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
Jan 28 2020 11:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திர மாநில சட்ட மேலவையை கலைப்பது தொடர்பாக, அம்மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்களை அமைப்பதற்கான மசோதா, ஆந்திர மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மேலவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், சட்டமேலவையில் தெலுங்குதேசம் கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், அதிருப்தியடைந்த முதலமைச்சர் திரு.ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவுக்கு சட்டமேலவையே தேவையில்லை என்றும், அதை ரத்து செய்யப்போவதாகவும் அறிவித்தார்.
மேலவை கலைக்கும் முடிவுக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சூழலில், மேலவையை கலைப்பது தொடர்பாக, நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் போடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் அவையை புறக்கணித்தனா். இதையடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.