அசாமில் நீடித்துவரும் தனி மாநிலம் தொடர்பான போராட்டங்கள் - கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் 'போடோ' குழுக்கள் மத்திய அரசுடன் முத்தரப்பு ஒப்பந்தம்
Jan 28 2020 11:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அசாமில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த 'போடோ' குழுக்களுடன் மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் அதிகம் வசித்து வரும் போடோ இன மக்கள், பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி, போடோலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் கோரி, ஆயுதப் போராட்டங்களை நடத்தி வந்தனர். அரசு எதிரான நடைபெற்ற போராட்டங்களில் போது இந்த குழுக்கள் நடத்திய தாக்குதலில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அசாம் அரசு, மத்திய அரசு மற்றும் போடோ குழுக்கள் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதன்படி, போடோ குழுக்களை சேர்ந்த சுமார் 1,550 பேர், வரும் 30-ம் தேதி சரணடைய இருக்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா முன்னிலையில் போடோ குழுக்களின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.