காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரை ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் குடியமர்த்துவோம் : பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்
Jan 28 2020 2:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரை, ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் குடியமர்த்துவோம் என்றும், அதனை எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணியில் திரு. ராஜ்நாத் சிங் உரையாற்றினார். எந்தவொரு மதத்தின் உணர்வுகளையும் புண்படுத்துவதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்படவில்லை என்றும், மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு, நிவாரணம் வழங்குவதற்காகவே சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதாகவும் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தியே ஆக வேண்டும் என்றும், அதனை மறுக்க எந்த மாநில அரசுக்கும் உரிமை இல்லை என்றும் தெரிவித்தார்.
காஷ்மீரில் இருந்து கடந்த 1990-ம் ஆண்டு, தீவிரவாத அச்சுறுத்தலால் வெளியேற்றப்பட்ட காஷ்மீர் பண்டிட்களை, மீண்டும் ஜம்மு காஷ்மீரில் குடியமர்த்துவோம் எனக் கூறிய திரு. ராஜ்நாத் சிங், அதனை எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.