குடியுரிமை திருத்த சட்ட விதியில் மதச்சான்றிதழை அவசியமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்
Jan 28 2020 2:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்த சட்ட விதியில் மதச் சான்றிதழை அவசியமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். பின்னர் அரசாணை வெளியிடப்பட்டு குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், இச்சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்ட விதிகளின்படி, குடியுரிமை பெற மத சான்றிதழ் அவசியம் என தகவல் வெளியாகிவுள்ளது.