கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தில் இந்திய மக்கள் : 4 நகரங்களில் 11 பேர் தனிவார்டுகளில் கண்காணிப்பு
Jan 28 2020 2:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பை, ஹைதராபாத், பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய 4 நகரங்களை சேர்ந்த 11 பேர், கொரோனா வைரஸ் சந்தேகத்தின்பேரில், மருத்துவமனைகளில் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சீனாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ், அமெரிக்கா, ஐரோப்பா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் மக்களிடையே இருந்து வருகிறது. ஆனால், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவர்களில், ராஜஸ்தான், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தலா ஒருவரும், மஹாராஷ்ட்ர மாநிலம் மும்பையில் 5 பேரும், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 4 பேரும் என, மொத்தம் 11 பேர், கொரோனா வைரஸ் சந்தேகத்தின்பேரில், மருத்துவமனைகளில் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.