குற்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும் எந்த காவல் நிலையத்திலும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம் : கேரள டி.ஜி.பி லோக்நாத் பெக்ரா சுற்றறிக்கை
Jan 28 2020 2:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குற்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும், அது தொடர்பாக எந்த காவல் நிலையத்திலும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம் என கேரள டி.ஜி.பி திரு.லோக்நாத் பெக்ரா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கேரள மாநில டி.ஜி.பி திரு. லோக்நாத் பெக்ரா அம்மாநிலத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், குற்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அது தொடர்பாக எந்த காவல் நிலையத்திலும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அதை அனுப்பி வைக்கலாம் எனவும், இதில் அதிகாரிகள் தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி ரயில்களிலோ பேருந்து பயணத்தின் இடையிலோ ஏதாவது குற்றச் சம்பவம் நடந்தால் பாதிக்கப்பட்டவர் எங்கு இறங்குகிறாரா அந்த காவல் நிலையத்தில் புகார் செய்யலாம் - அங்கு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.