வங்கிக் கடனுக்கு ஈடாக தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்பனை செய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவு
Jan 28 2020 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கிக் கடனுக்கு ஈடாக, தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்பனை செய்திட, லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிங்பிஷர்' விமான நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாததால், அவர் மீது வங்கி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் லண்டனுக்கு தப்பிச் சென்றதை அடுத்து, அவரை இந்தியா கொண்டு வருவது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, கத்தார் தேசிய வங்கியில், மல்லையா வாங்கிய கடனுக்காக சொகுசுப் படகை விற்க அனுமதிக்க வேண்டும் என, அவ்வங்கி, லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சொகுசுப் படகை விற்பனை செய்திட அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, மல்லையாவுக்கு சொந்தமான அந்த சொகுசுப் படகு பறிமுதல் செய்யப்பட்டு, இங்கிலாந்து நாட்டின் சவுத்ஹாம்டன் நகரில் வைக்கப்பட்டுள்ளது என்றும், அது விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.