போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு - வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி ரவீந்திர பட் வெளியேறினார்
Jan 28 2020 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு, மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து, தான் வெளியேறுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி திரு. ரவீந்திர பட் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மத்தியபிரதேச தலைநகர் போபாலில் செயல்பட்டு வந்த, அமெரிக்காவின் யூனியன் கார்பைட் நிறுவன தொழிற்சலையில், 1984-ம் ஆண்டு விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில், 3 ஆயிரம் பேர் பலியான நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு, இழப்பீடு தொகையாக, யூனியன் கார்பைட் நிறுவனம், 715 கோடி ரூபாய் வழங்கியது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலமாக, பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதால், அவர்களது மருத்துவ செலவுக்கு, கூடுதலாக 7,844 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அமெரிக்க நிறுவனத்துக்கு உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையிலிருந்து, தான், வெளியேறுவதாக நீதிபதி திரு. ரவீந்திர பட் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.