குஜராத்தில் உலக உருளைக்‍கிழங்கு மாநாடு : விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

Jan 28 2020 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

வரும் 2022-ம் ஆண்டுக்‍குள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் தலைநகர் காந்தி நகரில் நடைபெறும் 3-வது உலக உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோதி, டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். உருளைக்‍கிழங்கை அதிக அளவு உற்பத்தி செய்யும் முன்னணி மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று எனத் தெரிவித்த திரு. மோதி, உலக உருளைக்‍கிழங்கு மாநாடு இங்கு நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்‍கு அறிவுரை வழங்கினார். நீர்ப்பாசனத்தில் அறிவியல், தொழில்நுட்ப அணுகு முறைகளை மேற்கொள்ள அவர் வலியுறுத்தினார். வரும் 2022-ம் ஆண்டுக்‍குள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00