மத்திய பா.ஜ.க., அரசின் நடவடிக்கைகளால் ஓராண்டில் மட்டும் 1 கோடி இளைஞர்கள் வேலையிழந்துள்ளனர் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Jan 28 2020 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொருளாதாரம், விவசாயம், வேலைவாய்ப்பு என அனைத்தையும், பிரதமர் மோதி தலைமையிலான பா.ஜ.க. அரசு சீரழித்துவிட்டதாக திரு. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இளைஞர்கள் எழுச்சி பேரணியில் கலந்துகொண்ட திரு. ராகுல் காந்தி, மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் திரு. நரேந்திர மோதி, எங்கு சென்றாலும், குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை குறித்து மட்டுமே பேசுவதாகவும், வேலைவாய்ப்பு குறித்து வாய் திறப்பதில்லை என்றும் கூறினார். 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்ததாகவும், ஆனால், கடந்த ஆண்டு மட்டும், ஒரு கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளதாகவும், திரு. ராகுல் தெரிவித்தார். நாட்டின் சொத்துகளான இளைஞர்களின் திறனை மத்திய அரசு வீணடிப்பதாக குற்றம்சாட்டினார். ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு என மக்களை வஞ்சித்த பா.ஜ.க. அரசு, நாட்டின் பொருளாதாரத்தையும், விவசாயத்தையும் சீரழித்துவிட்டதாக விமர்சித்தார். பாலியல் வன்கொடுமைகளின் தலைநகராக இந்தியா மாறியுள்ளதாகவும் திரு. ராகுல் கவலை தெரிவித்தார்.