டெல்லி வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் உதவி தேவை - பதவியேற்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் உரை
Feb 16 2020 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் திரு.நரேந்திர மோதியின் உதவியை எதிர்பார்த்திருப்பதாக, முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சராக திரு.அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய திரு. அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் தனது குடும்பத்தினர் என்றும், மக்கள் கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்தார். டெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் திரு.நரேந்திர மோதியின் உதவியை எதிர்ப்பார்ப்பதாகவும் திரு.கெஜ்ரிவால் கூறினார்.