பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட கர்நாடக பொறியியல் மாணவர்கள் : போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Feb 16 2020 2:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட பொறியியல் மாணவர்கள் 3 பேர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சி.ஆர். எப்., வீரர்களுக்கு, நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில், மூன்று காஷ்மீர் இளைஞர்கள், புல்வாமா தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தபடி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போட்ட, வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவைப் பார்த்த, கல்லுாரி முதல்வர் ஒருவர், அம்மூன்று பேரும் தங்கள் கல்லுாரியில், படித்து வருவதை அறிந்தார். உடனே அவர்களை வரவழைத்து, எச்சரித்து அனுப்பினார். இதுதொடர்பாக அந்த 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்த நிலையில், பல்கலைக்கழகம் சார்பிலும் அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள், காஷ்மீர் சோபியான் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக, ஹூப்ளி-தர்வாத் நகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.