வாரணாசியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்த பிரதமர் மோதி
Feb 16 2020 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெறும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பிரதமர் மோதி திறந்து வைத்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் நடைபெறும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோதி, வாரணாசி வந்தடைந்தார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த உபாத்யாயாவின் சிலையையையும், கைவினைப் பொருட்கள் கண்காட்சியையும் திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்துள்ள கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து, கண்காட்சியை பார்வையிட வந்திருந்த வெளிநாட்டினருடன் பிரதமர் மோதி உரையாடினார்.