குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறது தெலங்கானா அரசு - மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
Feb 17 2020 9:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, எதிர்வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றுவது என்று, முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், மாநில முதலமைச்சருமான திரு. சந்திரசேகர ராவ் தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க., அரசு கொண்டு வந்துள்ள, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, எதிர்வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, கேரள மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், அம்மாநில சட்டப்பேரவையில் முதன்முதலாக தீர்மானம் நிறைவேற்றினார். இதைத் தொடர்ந்து, பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.