இட ஒதுக்கீடு விவகாரம் : புதுச்சேரி அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி
Feb 17 2020 7:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய, மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் நலனை பேணி காத்திட வேண்டும் - பின்தங்கிய மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, அவர்களின் உரிமையை பறிக்க முயலும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சித் தலைவரும், அமைச்சருமான திரு.நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் திரு.நாராயணசாமி, தேவைப்பட்டால் புதுச்சேரி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.