வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து, நாடு முழுவதும் மிகவும் தூய்மையான பெட்ரோல், டீசல் கிடைக்கும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு
Feb 20 2020 11:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து, நாடு முழுவதும் மிகவும் தூய்மையான பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது Euro-Four ரக பெட்ரோல் டீசல் விற்பனையாகிறது. எரிபொருளில் உள்ள கந்தகத்தின் அளவை வைத்தே அதன் தூய்மை மதிப்பிடப்படுகிறது. Euro-Four ரக பெட்ரோலில் உள்ள கந்தகத்தின் அளவு 50 PPM ஆகும். காற்று மாசுபடுதலை குறைக்க டெல்லியில் கடந்த ஆண்டிலிருந்தே Euro-Six ரக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் Euro-Six ரக எரிபொருளுக்கு மாற்ற திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக எண்ணெய் நிறுவனங்கள் 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் எந்த விதமான இடையூறும் இன்றி நாடு முழுவதும் BS-6 ரக பெட்ரோல், டீசல் கிடைக்கும் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனத்தலைவர் தெரிவித்துள்ளார்.