நீதிமன்றங்கள் மூலம் அண்மைக்காலங்களில் மிக முக்கிய தீர்ப்புகள் கிடைத்துள்ளன - பிரதமர் மோடி பேச்சு
Feb 22 2020 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகளவில் விவாதங்களை எழுப்பிய பிரச்னைகளுக்கு, அண்மைக்காலங்களில், நீதிமன்றங்கள் மூலம் முக்கிய தீர்ப்புகள் கிடைத்துள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில், சர்வதேச நீதித்துறை மாநாடு நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற வளாகத்தில் நேற்று தொடங்கிய இந்த மாநாடு நாளைவரை நடைபெறுகிறது. மாநாட்டின் இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோதி, உண்மை மற்றும் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கை, நீதித்துறையின் அடித்தளமாக கருதப்படுவதாக தெரிவித்தார். உலகளவில் விவாதங்களை எழுப்பிய பிரச்னைகளுக்கு, அண்மைக்காலங்களில், நீதிமன்றங்கள் மூலம் முக்கிய தீர்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறினார். அயோத்தி தீர்ப்பை 130 கோடி இந்திய மக்களும் முழு மனுதுடன் ஏற்றுக்கொண்டதை, பிரதமர் திரு. மோதி மறைமுகமாக குறிப்பிட்டார்.