பிரதமர் நரேந்திர மோதிக்கு 2 புதிய ஆலோசகர்களை நியமித்து மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஆணை பிறப்பிப்பு
Feb 22 2020 2:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் திரு. நரேந்திர மோதிக்கு, 2 புதிய ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான திரு. பாஸ்கர் குல்புலே, திரு. அமர்ஜித் சின்ஹா ஆகியோரை பிரதமரின் தனி ஆலோசகர்களாக நியமித்து மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஆணை பிறப்பித்துள்ளது. மேற்குவங்கத்தை சேர்ந்த திரு. குல்புலே, பிரதமர் அலுவலக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும், பீகாரை சேர்ந்த திரு. சின்ஹா, ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.