சனிக்கிழமையில் பள்ளிக்கு புத்தகப்பை எடுத்துச் செல்ல வேண்டாம் : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு
Feb 22 2020 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சனிக்கிழமையில் மாணவர்கள் பள்ளிக்கு புத்தகப்பைகளை கொண்டு செல்ல வேண்டாம் என ராஜஸ்தான் முதல்வர் திரு. அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட், நேற்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதனையொட்டி, அவர் வெளியிட்ட அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், இனி சனிக்கிழமையில் புத்தகப் பைகளை கொண்டு செல்ல வேண்டாம் என்றும், அன்று பாடங்கள் நடத்தப்படாது என தெரிவித்தார். அந்த நாளில் மாணவர்களுக்கு இலக்கியம் பற்றிய பாடங்களும், நடனம் உள்ளிட்ட கலைகளும் பயிற்றுவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெறும் பெறுபவர்களுக்கு 3 கோடி ரூபாயும், வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெறுவோருக்கு முறையே 2 கோடி, ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.