கொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்
Feb 23 2020 1:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக, சிங்கப்பூருக்கு செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அண்டை நாடான சீனாவில், கோவிட் 19 எனப்படும், கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இந்த கொடிய நோயினால், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சரவைச் செயலாளர் திரு. ராஜிவ் கவுபா, சிங்கப்பூருக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களுக்கு, விமான நிலையங்களில் பரிசோதனைத் தொடரும் என்றும், வரும் திங்கட்கிழமை முதல், நேபாளம், மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படும் என்றும் திரு. ராஜிவ் கவுபா கூறினார்.