ஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் : கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோதி உரை
Feb 23 2020 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசாவில், கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் திரு.மோடி, ஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்புடன் செயல்படுகின்றனர் என தெரிவித்தார்.
ஒடிசாவின் கட்டாக் நகரில் ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகள, டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய பிரதமர், ஒடிசாவில் முதல்முறையாக கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன - இந்திய விளையாட்டு போட்டிகளுக்கான வரலாற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்பதுடன், வருங்காலத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார்.
கேலோ இந்தியா பள்ளிகளுக்கான போட்டிகளில் இந்த வருடம் 80 சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், அவற்றில் 56 சாதனைகளை சிறுமிகள் செய்துள்ளனர் என புகழாரம் சூட்டினார். இதுபோன்ற விளையாட்டு போட்டிகளில், ஏழைக் குடும்பத்து மற்றும் சிறிய நகரங்களில் இருந்து வந்த வீரர்கள் சிறப்புடன் செயல்படுகின்றனர் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.