மன ரீதியான மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரி நிர்பயா வழக்கின் குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனு தள்ளுபடி : டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு
Feb 23 2020 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மன ரீதியான மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரி நிர்பயா வழக்கின் குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும், வரும் 3-ம் தேதி காலை, 6 மணிக்கு ஒரே நேரத்தில் தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளி வினய் சர்மா, தனக்கு மனச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மன ரீதியான சிகிச்சை அளிக்கக் கோரியும், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க பல்வேறு பொய்களை கூறி நாடகமாடுவதாக திகார் சிறை நிர்வாகம் வாதிட்டது. வினய் சர்மா தன்னை தானே காயப்படுத்திக் கொண்டு நாடகமாடுவதாகவும், கடந்த வாரம் தனது வழக்கறிஞர் மற்றும் தாயுடன் இருமுறை பேசியதாகவும், அவரது மனநிலை நன்றாகவே இருக்கிறது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வினய் சர்மாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.