மார்ச் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே : ஆட்சி பொறுப்பேற்று 100வது நாளையொட்டி ஸ்ரீராமரை தரிசிக்கிறார்
Feb 23 2020 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே, அடுத்த மாதம் 7-ம் தேதி அயோத்தி சென்று ஸ்ரீ ராமரை வழிபட உள்ளார் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் முதலமைச்சராக பதவியேற்ற திரு.உத்தவ் தாக்கரே, அடுத்த மாதம் அயோத்தி சென்று ஸ்ரீ ராமரை வழிபடுவார் என அக்கட்சியின் மூத்த தலைவர் திரு.சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். ஆட்சி பொறுப்பேற்று 100-வது நாளில் திரு.உத்தவ் தாக்கரே, மார்ச் மாதம் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் என திரு.சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார். திரு.உத்தவ் தாக்கரே அயோத்தி சென்று, ஸ்ரீராமரை வணங்கி, தீபாராதனை நடத்த உள்ளார் என்றும், அன்று மாலையில் சரயு நதிகரையில் நடைபெறும் ஆரத்தி விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், ஏராளமான சிவசேனா கட்சித் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் திரு.சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.