சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் காஷ்மீர் : அனைத்து பள்ளிகளும் நாளை முதல் மீண்டும் செயல்படும் என அறிவிப்பு
Feb 23 2020 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதையடுத்து, அனைத்து பள்ளிகளும் நாளை முதல் மீண்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அம்மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டனர். மேலும், பாதுகாப்பு கருதி பள்ளிக் கல்லூரிகளும் மூடப்பட்டன. இந்நிலையில், காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருவதையடுத்து, நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என்று, காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது. காஷ்மீரில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு, பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.