டெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பயங்கர மோதல் : கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பதற்றம்
Feb 24 2020 7:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில், Maujpur என்ற பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் போராடியவர்களிடையே மோதல் வெடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் உள்ள Maujpur பகுதியில், பா.ஜ.க.,வைச் சேர்ந்த திரு. கபில் மிஸ்ரா தலைமையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடைபெற்றது. இந்த பகுதி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெறும் ஜாப்ராபாத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்நிலையில், இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். அப்போது, ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதலில், இருதரப்பினரும் காயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதனால், அந்த இடமே போர்க்களமாக காட்சி அளித்தது.
இதைத் தொடர்ந்து, ஜாப்ராபாத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.