அதிபர் டிரம்ப் மனைவி மெலானியா பங்கேற்கும் பள்ளி நிகழ்ச்சி - முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை - அமெரிக்க தூதரகம் விளக்கம்
Feb 24 2020 8:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் நடைபெறும் பள்ளி விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சியில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பதில், எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அமெரிக்க தூதரகம் விளக்கமளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப், அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவுள்ள நிலையில், டெல்லியில் வரும் 25-ம் தேதி அரசுப் பள்ளி ஒன்றில் நடைபெறும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மெலானியா டிரம்ப் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பட்டியலில் இருந்து, டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் திரு. மணீஷ் சிசோடியா ஆகியோரின் பெயர்களை மத்திய அரசு நீக்கி உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
இது குறித்து விளக்களித்துள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா பங்கேற்கும் நிகழ்ச்சியில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் இது அரசு விழா இல்லை என்றும் தெரிவித்துள்ளது.