சுங்கச்சாவடிகளில் 'FasTag' வழிக்குள் Tag இல்லாமல் நுழைந்த வாகனங்களுக்கு ரூ.20 கோடி அபராதம் வசூல்
Feb 24 2020 10:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுங்கச் சாவடிகளில், 'FasTag' வழிக்குள், Tag இல்லாமல் நுழைந்த, 18 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு, 20 கோடி ரூபாய் அளவிற்கு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், FasTag நடைமுறை, அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சுங்கச் சாவடிகளில், வாகன நெரிசல் ஏற்படுவது, குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், FasTag பயனாளிகள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்பட்ட வழியில் நுழைந்த Tag இல்லாதவர்களிடம், 2 மடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், இதன்மூலம், 20 கோடி ரூபாய் அளவிற்கு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.